ராஷ்ட்ரியம் சுவயம் சேவக் சங்கம் ஒரு சுருக்கமான பார்வை

ராஷ்ட்ரியம் சுவயம் சேவக் என்னும் ஆக்டோபஸ்-3

ஊடுருவல்கள்

தேசத்தின் அனைத்துத் துறைகளிலும் இவர்களின் ஊடுருவல் இருக்கிறது.சாதாரண பாமரர்கள் முதல் மெத்தப்படித்த மேதாவிகள் அவைகள் வரை நுழைந்திருக்கிறார்கள்.அரசியல்வாதிகளில் இருந்து அதிகாரவர்க்கங்கள் வரை தங்களின் ஆதிக்கத்தை நிறுவி இருக்கிறார்கள்.சிறு குழந்தைகளுக்கான இயக்கத்தில் இருந்து ராணுவத்தில் பணிபுரிந்து வெளிவரும் வீரர்கள் வரை இயக்கங்களையும்,பிரிவுகளையும் வைத்திருக்கிறார்கள்.தேசத்தின் அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களிலும் தங்களின் உறுப்பினர்களை கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.கிட்டத்தட்ட ஒரு நிழல் அரசாங்கமாக இவர்கள் செயல்படுகிறார்கள்.ஊடகத்துறையில் இவர்களின் ஆதிக்கம் உச்சத்தை தொட்டிருக்கிறது.

வெளிநாட்டு நிதி

உலகிலேயே அதிகமாக வெளிநாட்டு நிதியைப் பெறும் அரசு சாரா நிறுவனமாக ஆர் எஸ் எஸ் விளங்குகிறது.இந்த நிதியை அவர்கள் எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்று இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஆர் எஸ் எஸ்ஸின் பிரிவான ஹிந்து சுவயம் சேவக்(HSS) என்னும் இயக்கத்திற்கு இதில் மிகப்பெரிய பங்கிருக்கிறது.இந்தியாவிற்கான நிவாரணம் மற்றும் முன்னேற்ற நிதி(India Relief and Development FUND-IRDF) என்ற பிரிவை தோற்றுவித்து உலக நாடுகளில் இருந்து நிதிகளை பெற்றுக் கொள்கிறார்கள்.

தீவிரவாதச் செயல்கள்

இந்திய அளவில் உள்ள தீவிரவாத இயக்கங்களில் முதலிடத்தில் உள்ளது ஆர்.எஸ்.எஸ். தான் என்று மகாராஷ்டிராவின் முன்னாள் ஐ.ஜி.,  எஸ்.எம். முஷ்ரிப் கூறியிருக்கிறார்.

 "இந்தியாவில் நடந்த கொடூரமான 13 பயங்கரவாத சம்பவங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். , பஜ்ரங் தளம் போன்ற பிற இந்து மத அமைப்புகள் மீது  மொத்தம் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய தீவிரவாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ். என்பதில் எந்த ஒரு சந்தேகமும் தேவையில்லை." எனக் கூறுகிறார்.

தங்களின் நூற்றாண்டு கால இலக்கான ஹிந்து ராஷ்ட்ரா என்ற இலக்கை அடைவதற்கு அவர்களுக்கு இன்னும் ஓரிரு ஆண்டுகளே இருக்கின்றன.அதற்குள்ளாக இந்தியா முழுக்க தங்களின் மேலாதிக்கத்தை நிறுவ கடுமையாக உழைக்கிறார்கள்.RSSஐப் பொறுத்தவரை அவர்களின் இலக்கு நோக்கிய பயணத்தில் கிட்டத்தட்ட 90% வெற்றியடைந்துவிட்டார்கள்.அதாவது தங்களின் அஜெண்டாக்களை,செயல்திட்டங்களை மக்கள்மயப்படுத்துவதிலும்,அதிகாரமயப்படுத்துவதிலும் வெற்றியடைந்து விட்டார்கள்.

பாரதிய ஜனதா கட்சி


2015ம் ஆண்டு சங்பரிவார்களின் அரசியல் பிரிவான பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் வென்று ஆட்சி அமைத்த பிறகு இஸ்லாமிய மக்களுக்கெதிரான செயல்பாடுகளும்,அடக்கு முறைச்சட்டங்களும்,குடியுரிமைச் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டு விட்டன.இந்திய தேசத்தின்  நான்கு தூண்கள் எனப்படுபவைகளும் இவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன.காஷ்மீர் மீதான RSSன் அஜெண்டா நிறைவேற்றப்பட்டு விட்டது.ஹிந்து தலைவர்கள் என்போர்களின் வெறுப்பு பேச்சுக்களால் தலித்துகள்,முஸ்லீம்கள் மற்றும் பழங்குடி மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்கள் நடைபெறுவதோடு படுகொலைகளும் நடக்கின்றன.அரச பயங்கரவாதங்களை கேள்வி கேட்டால் சிறையில் தள்ளுவது.அதோடு முதலாளித்துவத்தை தன்னுடைய அரசியல்சார் மேலாதிக்கத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தையும்,வளங்களையும்,விவசாயிகள்,தொழிலாளர்கள் என எளிய மக்களின் வாழ்வாதாரங்களையும் நெருக்கடிக்கு உட்படுத்தி அவர்களை போராட்டக்களங்களுக்கு வர வைத்து மக்களின் கவனங்களை வேறு பக்கம் திசை திருப்பி திறைமறைவில் தங்களின் ஹிந்து ராஷ்ட்டிரா கனவை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.பலௌவேறு மொழிகள்,கலாச்சாரங்கள்,இனங்கள்,பண்பாடுகளை இயற்கையாகவே கொண்டிருக்கும் நமது இந்திய தேசத்தை ஒற்றை தேசம்,ஒரே கட்சி,ஒரே ஆட்சி,ஒரே மொழி என சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

இறுதியாக...

இவ்வாறு பாசிசம்,நாசிசம்,பிராமணியம் இவற்றின் கூட்டுக்கலவையான RSS  தங்களின் இலக்கை அடைய  கடுமையாக பணியாற்றுகிறது.சில போது அது தனது இலக்கை அடையவும் கூடும்.ஆனால் இப்படி சர்வாதிகார அடிப்படையில் மக்கள் மீது தங்களின் வெறுப்பரசியலை,மேலாதிக்கத்தை திணிப்பவர்கள் உலக வரலாற்றில் ஒரு போதும் நிலைத்ததில்லை.காலங்கள் கடந்தும் இத்தகையோரை கொடுமையாளர்களாகவே வரலாறு பதிவு செய்யும்.ஆர் எஸ் எஸ் தங்களின் முன்மாதிரியாகக் கொண்டு செயல்படும் பாசிசமும்,நாசிசமும் இதே நூற்றாண்டுகளில் அவைகள் எங்கு தோற்றம் பெற்றனவோ அதே இடங்களில்தான் வீழ்த்தவும் பட்டன.இது நாளை இவர்களுக்கும் நடக்கும்.இதுதான் வரலாறுகள் கூறும் பாடம்.

Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.