வட்டி ஒரு இஸ்லாமியப் பார்வை.
வட்டி ஒரு சமூகக் கொடுமை! வட்டி… வட்டி… வட்டி… தமிழில் ஒரு பிரபலமான கூற்று உண்டு! அட்டிகை செய்வதற்கு வட்டிக்கு வாங்கினேன். வட்டியைக் கட்ட முடியாமல் அட்டிகையை விற்று வட்டியைக் கட்டினேன். – பழமொழி. அட்டிகையை விற்றும் வட்டிக் கணக்கு முடியாமல் புட்டி விஷத்தில் மொத்தக் கணக்கையும் முடித்துக் கொண்டவர்கள் இன்று எத்தனையோ பேர். உன் அப்பன் செத்தால் என்ன ? நீ வட்டியைக் கட்டு, உன் கணவன் செத்தால் என்ன ? நீ வட்டியைக் கட்டு என்று கல்நெஞ்சர்கள் மனைவிப் பிள்ளைகளை விரட்டுவார்கள் என்பதால் அவர்கள் வாயிலும் விஷத்தை ஊற்றி என்னுடன் அழைத்துச் சென்று விட்டேன் என்று வட்டிக்கடன் அடைக்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டவர்களின் காலுக்கடியில் இருக்கும் கடிதத்தில் மேற்காணும் விதம் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறோம். வாழ்ந்து கெட்டவர்கள் என்று சொல்வதுண்டு, வட்டியால் அழிந்து கெட்டவர்களே அதிகம். இன்னும் வட்டிக் கொடுமையால் பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு அதன் அதிபர்கள் எஸ்கேப், அல்லது தற்கொலை. இன்னும் வட்டிக் கொடுமையால் சின்னஞ்சிறு நாடுகள் கடன் பெற்ற நாடுகளின் (திரைமறைவில்) காலன