Posts

Showing posts with the label முஸ்லீம்கள்..

பாபரி மஸ்ஜித்.... வீழ்ச்சியின் வேதனை, எழுச்சியின் அடையாளம்.....

Image
பாபரி மஸ்ஜித்!  என்றும் நம் நினைவில்!! சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதச் செயலான தேசத் தந்தை மகாத்மா காந்தி படுகொலைக்கு பிறகு நடந்த மிகப்பெரிய மற்றொரு பயங்கரவாதம் பாபர் மஸ்ஜித் இடிப்புச் சம்பவம்.இந்திய வரலாற்றில் என்றென்றும் கரும்புள்ளியாக இருக்கக்கூடிய ஒரு முக்கியமான சம்பவம் இது. பாபரி பள்ளி தகர்ப்பு என்பது 463 ஆண்டுகால முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலதத்தின் இடிப்பு மட்டும் அல்ல மாறாக,  இந்தியாவின் மதிப்பு, கண்ணியம், பல்வேறு உயர்வான கொள்கைகள் என அனைத்தையும் தான் தகர்த்தது  என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். பாபரி மஸ்ஜிதை இடிப்பதற்கு சங்கப்பரிவார தலைமையிலான ஹிந்துத்துவா பாசிச கும்பல்கள் மிக நீண்ட நெடுங்காலமாக திட்டங்களை தீட்டி படிப்படியாக அதை அதிகாரமட்டத்தின் அனைத்து தரப்பினரின் உதவியுடன் அரங்கேற்றினர்.இந்திய தேசத்தில் உலகமயமாக்கலுக்குப் பிறகான காலகட்டங்களில் ஹிந்துத்துவ பாசிசத்தின் அணிதிரட்டலுக்கு பாபர் மசூதி இடிப்பு என்பது மிக சங்பரிவாரங்களுக்கு பேருதவியாக அமைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. உத்திரப்பிரதேசத்தின் அயோத்தி நகரில் பாபரி பள்ளி இருந்த இடத்தில்தான