மனித உயிரின் மதிப்பும், வாழ்வதற்கான உரிமையும்-3
வாழ்வுரிமை! உயிர் வாழும் உரிமையும், நம்மை அழிக்க நினைப்பவனை எதிர்த்துப் போராடும் உரிமையும் இஸ்லாத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை பார்த்தோம். அது போலவே தற்கொலையை இஸ்லாம் வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் தடுக்கவும் செய்கிறது என்பதும் வாழ்வுரிமையின் மற்றொரு பாகமாகும். மற்றவரின் உயிரைப் பறிக்கும் அதிகாரம் மனிதனுக்கு இல்லை, ஆனால் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமை உண்டு என்பது சிலரின் எண்ணம். அதனாலேயே வாழ்க்கையில் விரக்தியும் துக்கமும் அதிகமாகும்போது மரணத்தில் அபயம் தேடுகின்றனர். கல்வியறிவில் முன்னிலையில் இருக்கும் கேரள மாநிலத்தவரே மற்ற மக்களை விட அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது புள்ளி விவரக் கணக்கு. நமக்கு வாழ்க்கை அருளிய அல்லாஹ்வுக்கே அதை பறிக்கும் உரிமை உண்டு என்ற அசையாத நம்பிக்கை முஸ்லிம்களுக்கு இருக்கும் காரணத்தால் சமீப காலம் வரை முஸ்லிம்களுக்கிடையில் தற்கொலை என்பது பெயரளவில் கூட இல்லாமல் இருந்தது. ஆனால் மேற்கத்திய நாகரிக மோகம் இப்போது முஸ்லிம்களுக்கு இடையிலும் வேகமாக பரவி வரும் காரணத்தால் அங்குமிங்குமாக முஸ்லிம்களுக்கு இடையிலும் தற்கொலை பரவிவருகிறது.