ஊடகம் என்னும் ஆயுதம்
ஊடக பயங்கரவாதம்!! இந்தியாவில் பத்திரிக்கைத் துறையை மூன்று வகையாகப் பிரித்து பார்க்க வேண்டி உள்ளது.முதலாவதாக சுதந்திரத்திற்கு முன் பத்திரிக்கைகளை ஆரம்பித்தவர்கள்.இதில் பத்திரிக்கையை தொடங்கியவர்கள்,அங்கு பணியாற்றியவர்கள் என பெரும்பாலானவர்கள் சமூகப் போராளிகள்,அறிவாளிகள்,துணிச்சல் மிக்கவர்கள்,பல்மொழித் திறன் பெற்றவர்கள்,தங்களின் கொள்கைகளுக்காக சிறை சென்றவர்கள்,லட்சியம் மற்றும் கொள்கைகளுக்காக தங்களின் சொந்த வாழ்க்கை மற்றும் உயிரையும் துறந்தவர்கள். இரண்டாவதாக, நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பத்திரிக்கை தொடங்கியவர்கள்.பணக்காரர்கள்.பத்திரிகை துறையில் முதலீடு செய்வதின் வழியாக லாபம் ஈட்ட வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டவர்கள்.குறைந்தபட்ச தொழில் தர்மத்தையும்,பத்திரிக்கை மரபு மற்றும் தர்மத்தையும் கடைபிடித்து லாப நோக்கோடு பத்திரிக்கையை நடத்தியவர்கள்.இவர்களில் பலர் சமூக அக்கறையுடனும் சில போது அதிகார மையங்களிடம் அடிபணியாதவர்களாகவும் இருந்தனர். மூன்றாவது தரப்பினர் உலகமயமாக்கல் மற்றும் தாராள,தனியார் மயமாக்கலுக்குப் பிறகு தொடங்கப்பட்ட காட்சி ஊடகங்கள்.இவர்கள் பணத்தை மட்டுமே பிரதான நோக்கமாக கொண்