வரலாற்றை மாற்ற வந்த தூதர் !
நபிகளாரும்(ஸல்) -தோழர்களும்!! " பேரரசே! எங்களை விட மோசமாக வாழ்ந்தவர்கள் இப்புவியில் வேறு எவரும் இருக்க மாட்டார்கள்.அதுபோல எங்களைவிட வறுமையை அனுபவித்தோரும் எவரும் இருக்க மாட்டார்கள்.புழு பூச்சிகள் மற்றும் பாம்பு என்பது தான் எங்களின் உணவாக இருந்தன.ஆடு மற்றும் ஒட்டகத் தோல்களைத்தான் நாங்கள் ஆடையாக அணிந்து வந்தோம்.நாங்கள் பரஸ்பரம் மோதிக்கொண்டு படுகொலைகளை புரிந்து கொண்டும் இருந்தோம்.எங்களுக்கு பிறந்த பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்து வந்தோம்.அவர்களுக்கு உணவளிப்பதை நாங்கள் வெறுத்தோம். இந்நிலையில் இறைவன் எங்கள் மீது கருணை சொரிந்தான்.உன்னதமான ஒருவரை அவன் எங்களுக்கு வழிகாட்டியாக அனுப்பி வைத்தான்.அவரது ஊர்,பெயர் ,உறவுகள் மற்றும் உருவம் யாவும் ஏற்கனவே நாங்கள் அறிந்திருந்தவையேயாகும்.அவர் பிறந்த இடம் நாங்கள் போற்றி மதிக்கின்ற பகுதியில் தான் உள்ளது.அவரது குடும்பம் எங்களின் மிகச்சிறந்ததாகும். அவரது கோத்திரம் எங்கள் கோத்திரங்களில் மாண்பு மிக்க தாகும்.எங்கள் கூட்டத்தாரிலேயே சிறந்தவரும்,நேர்மையாளரும், பொறுமைசாலியும் ஆவார் அவர். அவர் எங்களை ஒரு கொள்கையின்பால் அழைத்தார்.ஆரம்பத்தில் அதை நாங