Posts

Showing posts from November 28, 2021

புறக்கணிக்கப்படும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையும், மறுக்கப்படும் நீதியும்.....

Image
நெஞ்சிலும் முதுகிலும்  குத்திய கழகங்கள்  கொந்தளிக்கும் இஸ்லாமியர்கள். ---------------------------------------------------------------- கட்டுரை : சமூக ஆர்வலர் எழுத்தாளர் பூமொழி ---------------------------------------------------------------- 1997ல் கோவையில் அந்தோணி செல்வராஜ் என்ற காவலர் கொலை செய்யப்பட்டார். காவலர் அந்தோணி செல்வராஜ் கிறிஸ்தவர் என்பதை மறைத்து, ஹிந்துவை முஸ்லிம்கள் கொலை செய்துவிட்டார்கள் என்ற வன்மமான செய்தியை தீயாய்ப்பரப்பி,  கோவையில் அன்றிருந்த காவல்துறையின் சில ஃபாசிச அதிகாரிகள் மற்றும் காவலர்களின் தூண்டுதலுடனும் துணையோடும், ஹிந்துத்துவ அமைப்பினர் செய்த பெரும் வன்முறையால், பத்தொன்பது அப்பாவி முஸ்லிம்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். பலர் படுகாயப்படுத்தப்பட்டனர். முஸ்லிம்களின் கடைகள் வீடுகள் உள்ளிட்ட ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான  சொத்துக்கள் சூறையாடப்பட்டு தீக்கிறையாக்கப்பட்டது. இந்த பெருங்கலவரத்தை, துணை ராணுவப்படையைக் கொண்டு ஒடுக்கினர். இந்த பெருங்கலவரத்திற்கு எதிராக, கோபத்தின் வெளிப்பாடாக ஆவேசப்பட்டு, கோவையில் 1998 பிப்ரவரி 14ல் குண்டுவெடிப்புகள் நடத்தப்