பயமும் சமூகமும்.....!
பயம் ஆபத்தை சந்திக்கும் போது உயிரினங்களிடம் ஏற்படும் மன ரீதியான நெருக்கடியே பயம். தனது ஆற்றல் மற்றும் கட்டுப்பாட்டிற்கு அப்பால் உள்ள நெருக்கடிகளோ, தடுக்க முடியாத எதிர் சக்திகளோ, இழப்பிற்கான வாய்ப்புகளோ பெரும்பாலும் பயத்திற்கான காரணங்களாக அமைகின்றன.வாழ்க்கை போராட்டத்திற்கிடையே எந்த ஒரு நபரும் பயத்தை நேருக்கு நேராக சந்திப்பார்.அதனை எதிர் கொள்வது அல்லது தப்பிப்பதே அவருக்கான வழியாக அமையும்.பாதுகாப்பான வாழ்க்கைக்கு தேவையான ஆற்றலை தயாரித்துக்கொள்ள பயம் ஒரு தூண்டுதலாக அமையும். வரலாற்றுக் காலம் முதலே தனது ஆபத்துகளை முறியடிக்க தேவையான ஆற்றலை மனிதன் வெளிப்படுத்தி இருக்காவிட்டால் அவன் வாழ்க்கையே ஆபத்தில் சிக்கி இருக்கும் என்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன இந்த தத்துவம் உடல்ரீதியான வாழ்விற்கு மட்டுமானது அல்ல. ஒரு மனிதனின் அடையாளம் கலாச்சாரம் நெருக்கடியை சந்திக்கும் போது அங்கே பயம் உருவாகும்.தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற பயம் வேறு எல்லாவற்றையும் விட மனிதனிடம் ஆதிக்கம் செலுத்துகிறது.இதனால் பலகீனமானவர்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் மானம் காக்க பின்வாங்குவதை காணலாம். மாதங்களோ