ராஷ்ட்டிரியம் சுவயம் சேவக் சங்கம் ஒரு சுருக்கமான பார்வை

ராஷ்ட்ரியம் சுவயம் சேவக்(RSS) என்னும் ஆக்டோபஸ்-2

நாட்டு விடுதலையில் ஆர் எஸ் எஸ்.

நாட்டின் சுதந்திரப் போராட்ட காலத்தில் அனைத்து மக்களும் ஆங்கிலேயரை எதிர்த்து விடுதலைக்காக போராடும் போது அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஒரே அமைப்பு இந்த இயக்கமே.வெள்ளையர்களுடனான தங்களின் நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டு தங்களின் விசுவாசத்தைக் காட்ட விடுதலைப் போராட்டங்களில் பங்கெடுத்த போராளிகளை ஆங்கிலேயர்களிடம் காட்டிக் கொடுத்த பெருமை இவர்களுக்கு உண்டு. அதோடு சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கவாதச் செயலான தேசத்தந்தை காந்திப் படுகொலையில் சம்பந்தப்பட்ட நாதுராம் கோட்சே உள்ளிட்டோர் RSS இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான்.சுதந்திர தினத்தன்று இவர்கள் மூவர்ண தேசியக் கொடியை ஏற்ற மாட்டார்கள்.தங்களின் கொடியான காவிக் கொடியைத்தான் ஏற்றுவார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயல்பாடுகள்

தங்களுடைய பிராமணிய ஹிந்துத்துவ மேலாதிக்கம் மற்றும் அகண்ட பாரதம் என்ற கொள்கைக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காதவர்கள் இவர்கள்.ஹிந்துக்கள் அல்லாத மற்ற மக்களை இந்த நாட்டின் மக்களாக இவர்கள் அங்கீகரிப்பதில்லை.இவர்களின் முதல் இலக்கே முஸ்லீம்கள்தான்.காரணம் இவர்களின் ஆதிக்கத்தை முதன்முதலாக இல்லாமலாக்கியது முஸ்லீம்கள்தான்.ஆர் எஸ் எஸ்ஸின் இரண்டாம் தலைவரான கோல்வால்க்கரின் உரைகளை வாசித்தால்,இஸ்லாம் மீதும்,முஸ்லீம்கள் மீதும் இவர்கள் கொண்டுள்ள வன்மமும்,வெறியும் புரியும்.தேசப் பிரிவினையின் போது நடைபெற்ற பெரும் கலவரங்களை முன்னின்று நடத்தியவர்கள் இவர்கள்தான்.முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதையே இலக்காகக் கொண்டிருக்கும் இவர்கள் இதற்காகவே தங்களின் உறுப்பினர்களுக்கு முஸ்லீம்கள் மீதான வெறியையும் பயிற்சியையும் கொடுத்து ராணுவக் கட்டமைப்புடன் செயல்படுகிறார்கள்.தேசத்தில் சிறியதும்,பெரியதுமாக இதுவரை நடந்த அனைத்துக் கலவரங்களிலும்,இனப்படுகொலைகளிலும் இவர்களின் பின்புலம் இருக்கிறது.சூரத்,கான்பூர்,அஸ்ஸாம் நெல்லி,மும்பை,கோவை,குஜராத்,முசாஃபர் நகர் என இவர்கள் நடத்திய கோரத்தாண்டவத்தை பட்டியலிட்டால் நீண்டு கொண்டே இருக்கும்.வெடிகுண்டு கலாச்சாரத்தை நாட்டில் தொடங்கி வைத்து ஏராளமான மக்களை கொன்றவர்கள் இவர்கள்.சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ்,மாலேகான்,நந்தித்,ஹைதராபாத் மக்கா மஸ்ஜித்,அஜ்மீர் தர்கா,தென்காசி என RSSன் பிரச்சாரக்குகள் நேரடியாக பங்கு பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் இவைகள்.கேரளாவில் வெடிகுண்டு தயாரிக்கும் போது பிடிப்பட்ட பிரச்சாரக்குகளும் இருக்கிறார்கள்.அதேபோல ஒரு பிரச்சினையை உருவாக்கி விட்டு அதில் மற்றவர்களை கோர்த்து விடுவதில் இவர்கள் வல்லவர்கள்.(நாதுராம் கேட்சே தனது கையில் இஸ்மாயில் என பச்சைக் குத்தியதைப் போல)

பாபர் மஸ்ஜித் இடிப்பு

ஆர் எஸ் எஸ்ஸின் இஸ்லாமிய வெறுப்பையும்,அதன் தலைவர்கள் மற்றும் செயல்வீரர்களின் கோர முகத்தையும் வெளி உலகிற்கு அப்பட்டமாக காட்டிய நிகழ்வுதான் பாபரி மஸ்ஜித் இடிப்பு சம்பவம்.தேச சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இஸ்லாமியர்களின் சொத்தான 800 ஆண்டு வரலாற்றைக் கொண்ட பாபரி மஸ்ஜிதை தங்களுடையது எனவும் ராமர் அங்குதான் பிறந்தார் எனவும் கட்டுக்கததைகளை பரப்பி அதை  மக்களிடம் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து மதவெறியூட்டி,படிப்படியாக  தங்கள் வசம் பள்ளிவாசலை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள்.இறுதியாக 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அன்று உலகமே பார்க்க பாபரி மஸ்ஜித் சட்டவிரோதமாக இடித்து தள்ளப்பட்டது.இடிப்பதற்கு முன்பாக RSS தலைவர்கள் தங்கள் தொண்டர்களிடம் பேசிய உரைகள் எல்லாம் மிக மோசமான மதவெறியை ஊட்டின.

-தொடரும்......

Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.