Posts

பூமி என்னும் உயிர் கிரகம்

Image
பூமி - Earth தற்போது உலகில் அதிகம் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு விசயம் பருவநிலை மாற்றமும், சுற்றுச் சூழல் சீர்கேட்டைக் குறித்தும்தான்.இந்த மாற்றங்களால் பூமி மிக வேகமாக தன்னுடைய இயல்பான தன்மைகளை இழந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இதை எப்படி எதிர்கொள்வது என உலகம் திணறிக் கொண்டிருக்கும் வேளையில் சுற்றுச் சூழல் குறித்து இஸ்லாமும் அதன் சட்டங்களும் என்ன சொல்கிறது என சுருக்கமாக பார்ப்போம். பூமி குறித்து இஸ்லாம்! வான வெளி பிரபஞ்சத்தில் ஏராளமான சூரியக் குடும்பங்கள் இருக்கின்றன என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.அப்படிப்பட்ட ஒரு சூரியக் குடும்பத்தின் மூன்றாவது  கோளான பூமியைத்தான் தன்னுடைய படைப்புகளாகிய மனிதர்களை வசிக்க இறைவன் தேர்ந்தெடுத்தான்.பூமியைப் படைத்த, தன்னுடைய வல்லமையை இறைவன் இப்படிக் கூறுகிறான்.. ‘‘அல்லாஹ்தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியில் இருந்தும் அவற்றைப் போலவும் படைத்தான். அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளை இறங்கிக் கொண்டே இருக்கிறது’’  (அல்குர்ஆன்–65:12). (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தா

புவி வெப்பமயமாதலும், பருவநிலை மாற்றங்களும்..

Image
புவிவெப்பமயமாதல்(Global Warming) பல வருடங்களாகவே உலகில் காலநிலை மாற்றம் என்பது மிகவும் மோசமான நிலையிலேயே இருந்து வருகிறது. ஓசோன் படலம் பாதிப்பு, காற்று மாசு, நீர் பற்றாக்குறை, பருவமழையின்மை, புவியின் வெப்பநிலை மாற்றம் என பல நிகழ்வுகள் நம்மை பெரிய அளவில் அச்சுறுத்திக்கொண்டுதான் இருக்கிறது. புவி வெப்பமயமாதலால் பெருவெள்ளம், சூறாவளி, வறட்சி, நோய்கள், கடல்வள அழிவு, பனிப்பாறை உருகுதல், கால நிலை மாற்றம் ஆகியவை ஏற்படுகின்றன. உலகின் வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ் என்பதிலிருந்து, ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்துவிட்டது. இதை 16 டிகிரி ஆகிவிடாமல் தடுக்கும் முயற்சியில் உலக நாடுகள் இருக்கின்றன, 15.5 டிகிரிக்குள் புவிவெப்பத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.இதிலும் அமெரிக்கா,ஐரோப்பி வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளான பிரேசில், இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை வஞ்சிக்கின்றன. பூமி மேற்பரப்பில் சராசரி வெப்பநிலை அதிகரித்திருப்பதால் துருவப் பனிப்பாறைகளும் விரைந்து உருகி வருகின்றன. அத்துடன் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தும் சூறாவளிகளும், புயல்களும் அடிக்கடி ஏற்ப

மனித உயிரின் மதிப்பும், வாழ்வதற்கான உரிமையும்-4

Image
வாழ்வுரிமை! அநியாயமாக கொல்லப்படுவதையும் தற்கொலை செய்வதையும் கூடாது என்று தடுத்த இஸ்லாம், முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புக்காக அவசியம் ஏற்படும் போது தம்முடைய உயிரையும் அர்ப்பணிக்க தயாராக இருக்கவேண்டும் என்று படிப்பிக்கிறது. இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில் எதிரிகள் களத்தில் இறங்கினால், முஸ்லிம்கள் புறமுதுகு காட்டாமல் கோட்டைச்சுவர் போல் உறுதியாக நின்று அவர்களை எதிர்க்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டால் அவனுக்கு ஷஹீதுடைய  அந்தஸ்து கிடைக்கும் நிச்சயம் கிடைக்கும்.ஷஹீதுகளுக்கு நிச்சயமாக சுவர்க்கம் கிட்டும்  என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் சுவனத்தில் பறவைகளாக ஆனந்தமாக பறந்து திரிவர் என்று ஹதீஸில் காணலாம். " அல்லாஹவின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்று எண்ணாதீர்கள். மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர். உணவளிக்கப்படுகின்றனர் " என்ற வசனம் பற்றி நாங்கள் நபி (ஸல்) அவர்களிம் கேட்டோம்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள்,  "அவர்களின்(ஷஹீதுகள்) உயிர்கள் பச்சை நிறத்துப் பறவையின் கூடுகளுக்குள் இருக்கும்.

மனித உயிரின் மதிப்பும், வாழ்வதற்கான உரிமையும்-3

Image
வாழ்வுரிமை! உயிர் வாழும் உரிமையும், நம்மை அழிக்க நினைப்பவனை எதிர்த்துப் போராடும் உரிமையும் இஸ்லாத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை பார்த்தோம். அது போலவே தற்கொலையை இஸ்லாம் வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் தடுக்கவும் செய்கிறது என்பதும் வாழ்வுரிமையின் மற்றொரு பாகமாகும். மற்றவரின் உயிரைப் பறிக்கும் அதிகாரம் மனிதனுக்கு இல்லை, ஆனால் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமை உண்டு என்பது சிலரின் எண்ணம். அதனாலேயே வாழ்க்கையில் விரக்தியும் துக்கமும் அதிகமாகும்போது மரணத்தில் அபயம் தேடுகின்றனர். கல்வியறிவில் முன்னிலையில் இருக்கும் கேரள மாநிலத்தவரே மற்ற மக்களை விட அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது புள்ளி விவரக் கணக்கு. நமக்கு வாழ்க்கை அருளிய அல்லாஹ்வுக்கே அதை பறிக்கும் உரிமை உண்டு என்ற அசையாத நம்பிக்கை முஸ்லிம்களுக்கு இருக்கும் காரணத்தால் சமீப காலம் வரை முஸ்லிம்களுக்கிடையில் தற்கொலை என்பது பெயரளவில் கூட இல்லாமல் இருந்தது. ஆனால் மேற்கத்திய நாகரிக மோகம் இப்போது முஸ்லிம்களுக்கு இடையிலும் வேகமாக பரவி வரும் காரணத்தால் அங்குமிங்குமாக முஸ்லிம்களுக்கு இடையிலும் தற்கொலை பரவிவருகிறது.

மனித உயிரின் மதிப்பும், வாழ்வதற்கான உரிமையும்-2

Image
வாழ்வுரிமை ! மனித உயிரின் முக்கியத்துவத்தையும் அதை அநியாயமாகப் பறித்தால் மறுமையில் கிடைக்கக் கூடிய தண்டனையைக் கூறி அச்சுறுத்துவதோடு  நின்று விடவில்லை இஸ்லாம். பாதுகாப்பு என்பதை செயல்படுத்தும் விதமாக ஒரு காரியத்தையும் முன்னிலைப்படுத்துகிறது. அநியாயமாக ஒரு உயிரை பறிப்பவனுக்கு மரணதண்டனையை இஸ்லாம் விதிக்கிறது.  மனிதனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலை வரும்போது ஹராமான செயல்களைக் கூட செய்ய அனுமதிக்கிறது இஸ்லாம். மனிதனின் வாழ்வுரிமையை நிலைநிறுத்த இஸ்லாம் கூறும் வழிமுறையே இந்த விதிவிலக்கு. உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலை வரும்போது இஸ்லாம் மனிதனின் பக்கமே நிற்கிறது.  கீழே கூறப்பட்ட குர்ஆன் வசனம் இதைத் தெளிவுபடுத்துகிறது. " (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன. (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்

மனித உயிரின் மதிப்பும்,வாழ்வதற்கான உரிமையும்-1

Image
வாழ்வுரிமை! ஒவ்வொரு மனிதனுக்கும் கண்டிப்பாக கிடைக்க வேண்டியது வாழ்வதற்குரிய உரிமை என்ற கருத்தில் மனிதாபிமானமுள்ள எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தில் மிகவும் முக்கியமானதாக வாழ்வுரிமை சேர்க்கப்பட்டுள்ளது. பூமியில் பிறந்த ஒரு மனிதனை, அவன் இயற்கையாக மரணம் அடையும் முன்னர் அவனது உயிரை எடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்பது மட்டுமல்ல,  அவன் மரணிக்கும் வரை அவன் வாழ்வதற்குத் தேவையான எல்லா வாய்ப்புகளும் அமைத்துக் கொடுக்க வேண்டிய கடமையும் சமூகத்திற்கு உண்டு. வாழ்வதற்கான உரிமையை பற்றி சிந்திக்கவும், அதற்காக போராட்டக் களத்தில் குதிக்குவும் பல காரணங்கள் உண்டு. சர்வாதிகாரிகளும், அநியாயமும், அநீதியும் சேர்ந்த ஆட்சிக்கு எதிராக குரல் உயர்த்திய ஆயிரக்கணக்கான மக்கள் சிரச்சேதம் செய்யப்பட்டதற்கு வரலாறுகளே சாட்சி. தொடர்ந்து நடந்த இதுபோன்ற குரூரங்களே வாழ்வதற்கான உரிமையை போராடிப் பெற வேண்டிய நிலையை உண்டாக்கியது. அதிகாரபலமும் பணபலமும் உள்ளவர் எவரையும் எக்காரணமும் இல்லாமல் கொன்றொழிக்கலாம் என்ற நிலைக்கு எதிராக உயர்ந்த அழுத்தமான எதிர்ப்பே வாழ்வுரிமை போராட்டத்திற்கு அடித

ராஷ்ட்ரியம் சுவயம் சேவக் சங்கம் ஒரு சுருக்கமான பார்வை

Image
ராஷ்ட்ரியம் சுவயம் சேவக் என்னும் ஆக்டோபஸ்-3 ஊடுருவல்கள் தேசத்தின் அனைத்துத் துறைகளிலும் இவர்களின் ஊடுருவல் இருக்கிறது.சாதாரண பாமரர்கள் முதல் மெத்தப்படித்த மேதாவிகள் அவைகள் வரை நுழைந்திருக்கிறார்கள்.அரசியல்வாதிகளில் இருந்து அதிகாரவர்க்கங்கள் வரை தங்களின் ஆதிக்கத்தை நிறுவி இருக்கிறார்கள்.சிறு குழந்தைகளுக்கான இயக்கத்தில் இருந்து ராணுவத்தில் பணிபுரிந்து வெளிவரும் வீரர்கள் வரை இயக்கங்களையும்,பிரிவுகளையும் வைத்திருக்கிறார்கள்.தேசத்தின் அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களிலும் தங்களின் உறுப்பினர்களை கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.கிட்டத்தட்ட ஒரு நிழல் அரசாங்கமாக இவர்கள் செயல்படுகிறார்கள்.ஊடகத்துறையில் இவர்களின் ஆதிக்கம் உச்சத்தை தொட்டிருக்கிறது. வெளிநாட்டு நிதி உலகிலேயே அதிகமாக வெளிநாட்டு நிதியைப் பெறும் அரசு சாரா நிறுவனமாக ஆர் எஸ் எஸ் விளங்குகிறது.இந்த நிதியை அவர்கள் எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்று இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஆர் எஸ் எஸ்ஸின் பிரிவான ஹிந்து சுவயம் சேவக்(HSS) என்னும் இயக்கத்திற்கு இதில் மிகப்பெரிய பங்கிருக்கிறது.இந