பூமி என்னும் உயிர் கிரகம்
பூமி - Earth தற்போது உலகில் அதிகம் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு விசயம் பருவநிலை மாற்றமும், சுற்றுச் சூழல் சீர்கேட்டைக் குறித்தும்தான்.இந்த மாற்றங்களால் பூமி மிக வேகமாக தன்னுடைய இயல்பான தன்மைகளை இழந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இதை எப்படி எதிர்கொள்வது என உலகம் திணறிக் கொண்டிருக்கும் வேளையில் சுற்றுச் சூழல் குறித்து இஸ்லாமும் அதன் சட்டங்களும் என்ன சொல்கிறது என சுருக்கமாக பார்ப்போம். பூமி குறித்து இஸ்லாம்! வான வெளி பிரபஞ்சத்தில் ஏராளமான சூரியக் குடும்பங்கள் இருக்கின்றன என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.அப்படிப்பட்ட ஒரு சூரியக் குடும்பத்தின் மூன்றாவது கோளான பூமியைத்தான் தன்னுடைய படைப்புகளாகிய மனிதர்களை வசிக்க இறைவன் தேர்ந்தெடுத்தான்.பூமியைப் படைத்த, தன்னுடைய வல்லமையை இறைவன் இப்படிக் கூறுகிறான்.. ‘‘அல்லாஹ்தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியில் இருந்தும் அவற்றைப் போலவும் படைத்தான். அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளை இறங்கிக் கொண்டே இருக்கிறது’’ (அல்குர்ஆன்–65:12). (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தா